| முன் கதை சுருக்கம்... |
|---|
| சமீர் அவினாஷிடம் அவன் தன் love proposal-ஐ ஏற்க மறுப்பதற்கு காரணம் ரவியின் நினைவில் இருந்து இன்னும் move on ஆகாததே என்று தெளிவுபடுத்துகிறான். அவினாஷுக்கு சமீர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணர்ந்தாலும், தான் சமீரின் காதலை ஏற்றுக்கொண்டால் அது ரவி மீது வைத்துள்ள காதலுக்கு துரோகம் செய்வதாக இருக்கும் என்று தவிக்கிறான். |
ரூபா அடுப்பில் பாத்திரத்தை வைத்து பால் packet-ஐ பிரித்து ஊற்றினாள். அவள் மனம் மீண்டும் பின்னோக்கி போனது.
ரவி mobile phone-ல் யாரிடமோ கெஞ்சிக்கொண்டிருந்தான். “ஹரிதா! ப்ளீஸ்… இன்னும் கொஞ்ச நாள் டைம் குடு. அதுக்குள்ள நான் அவனை தேடி கண்டுபிடிச்சுடுறேன். நானும் அவனை full fledged-ஆ தேடிட்டு தான் இருக்கேன். Emergency accident இல்லை Sick leave-ஆ போட்டு வச்சிரு… அவனை terminate பண்ணிடாதே.. பாவம் அவன்!”. ஒருவேளை அந்த ஹரிதா நேரில் இருந்தால் ரவி அவள் காலிலேயே விழுந்திருப்பான். ரூபா சுடச்சுட தோசையை ரவியின் தட்டில் போட்டபடி அவனை இன்னும் உஷ்ணமாக பார்த்தாள்.
“ரூபா! அவினாஷ் நம்ம வீட்டுல இருந்து போன நாள்ல இருந்து Office-க்கே வரலை. மூணு நாளுக்கு மேலே அவன் கிட்டே இருந்து எந்த Communication-ம் இல்லாததால அவன் “job-ல இருந்து absconding”-ன்னு சொல்லி HR-ல Disciplanary action எடுக்குறாங்க. அவனை இன்னைக்கே terminate பண்ணிடுறதா இருக்காங்க… அவனை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு தெரியலை…”
“அந்த ஆம்பள பொறுக்கி இந்நேரத்துக்கு வேற எவன் கூட ஊர் மேஞ்சிட்டு இருக்கோ தெரியலை… நல்ல காசு பார்ட்டியா புடிச்சிருப்பான்… அதனால தான் வேலைல வர்ற பிச்சை காசு என்னாத்துக்குன்னு எவன் கூட எந்த ஹோட்டல் ரூமை நாறடிச்சுட்டு இருக்கோ… அதெல்லாம் காலை விரிச்சு பொழச்சிக்கும்” ரூபா சட்னியை ஸ்பூனோடு லொட்டென சத்தத்தோடு ரவியின் தட்டில் கொட்டினாள். ரவி அவளை கோபத்தோடு முறைக்க, ரூபா “உன் கோபம் என்னை என்ன செய்யும்” என்பது போல அவனை நக்கலாக பார்த்துவிட்டு நகர்ந்தாள். கோபத்தில் ரவி பல்லை கடிக்க, மிட்டு வந்து அவன் மடியில் ஏறி உட்கார, சூழ்நிலை கைதியாக ரவி இடிந்துப்போய் உட்கார்ந்தான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
ரவி இனி அவினாஷை சந்திப்பதில்லை பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தாலும், அவன் ஓயாமல் அவினாஷை தேடி கண்டுபிடிப்பதில் அலைவது ரூபாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் மற்றவர்களிடம் பேசுவதை கேட்டதில் இருந்து ரவி போலீஸ்-ல் complaint கொடுக்க முயற்சித்ததும், அவன் அவினாஷுக்கு சொந்தக்காரன் இல்லை என்பதால் ஏன் இந்த மெனக்கெடல்? ஒருவேளை Cheating case-ஆ இல்லை வேறு செக்ஸ் குற்றமா? ரவி அவினாஷின் மீதான தனிப்பட்ட பகை காரணமாக தேடுகிறானா என்று துருவி துருவி கேட்டு ரவியின் complaint-ஐ ஏற்பதற்கு கடும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டது. அப்படியும் சிவாவுக்கு தெரிந்த ஒரு இன்ஸ்பெக்டர் தனிப்பட்ட முறையில் உதவி செய்ய ஒரு நாள் இரவு ரவிக்கு அழைப்பு வந்தது.
“சார்! அப்படி எல்லாம் இருக்காதுங்க சார்… அவன் அப்படி பட்ட பையன் இல்லை” விட்டால் ரவி அழுதுவிடுவான் போல இருந்தது.
“….” எதிர்முனையில் ரவியை சமாதானப்படுத்தும் விதமாக ஏதோ சொல்லப்பட்டது.
“இதோ கிளம்பிட்டேன் சார்…” ரவி அவசரம் அவசரமாக டி-ஷர்ட் மாட்டிக்கொண்டு கிளம்ப, எதிரில் ரூபா வழியை மறித்தபடி நின்றாள். கூடவே மிட்டுவை மனித கேடயம் போல பிடித்து ரவியை மறைமுகமாக மிரட்டலாக நின்றாள்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
“எங்கே?” ரூபாவின் குரலில் தெனாவட்டு.
“மார்ச்சுவரியிலே அவினாஷ் வயசு, அவன் அடையாளத்துல ஒரு பையனோட பொணம் வந்திருக்காம்… அடையாளம் காட்ட சொல்றாங்க… வழிய விடுறியா?” ரவி அதட்டலோடு சொன்னபடி ரூபாவை நகர்த்திவிட்டு வெளியேற, ரூபா உடம்பெல்லாம் வியர்த்து வெலவெலக்க ஆரம்பித்திருந்தாள்.
ரூபாவின் வெள்ளை உடை அணிந்திருந்த தேவதை மனசாட்சி கேள்வி கேட்டது “அடியே! அந்த பையன் மேல உனக்கு என்ன கோபம்? அவன் Gay-ங்குறத தவிர வேற காரணம் சொல்லு பார்க்கலாம்? அவன் கே-யா இருந்தா உனக்கு என்னடி போச்சு? அவன் வாழ்க்கையை அவன் வாழுறான். நீ எதுக்கு அவனை judge பண்ணனும்? போற போக்க பார்த்தா அவன் பொண்ணு கூட படுத்திருந்தா கூட உனக்கு இப்படி தானே கோபம் வந்திருக்கும்? ”
“அவன் அப்படி இருக்குறதுல எனக்கு என்ன பிரச்சனை? ஆனா என் புருஷனை மயக்கிட்டான்னா?” கறுப்பு புடவை அணிந்த ரூபாவின் மனசாட்சி எதிர் வாதம் புரிந்தது.
“ஆமாம். உன் புருஷன் குழந்தை. எதையாச்சும் காட்டி மயக்கி sexual orientation-ஐ மாத்துறதுக்கு. முப்பத்தஞ்சு வயசு ஆம்பளைக்கு தன்னை பத்தி தெரியாதா? அப்படியே அவங்களுக்குள்ளே ஏதாச்சும் இருந்தாலும் அதுக்கு உன் புருஷனும் தானே முழு பொறுப்பு? ஆனா உன் புருஷன் மேலே இருக்குற தப்பை மறைக்குறதுக்காக அந்த பையனை அசிங்கப்படுத்தி வெளியே துரத்திட்டியே. ஒருவேளை அவன் அவமானம் தாங்காம தற்கொலை பண்ணியிருந்தா அவன் சாவுக்கு நீ பொறுப்பெடுத்துக்குவியா?” வெள்ளை மனசாட்சியின் கேள்விக்கு கறுப்பு மனசாட்சி பதில் சொல்ல தெரியாமல் மறைந்தது.
ரூபா வேண்டிக்கொண்டாள் “கடவுளே! தயவு செஞ்சு அந்த பொணம் அவினாஷா இருக்கக்கூடாது” பூஜை அறையில் சாமி photo-ல் இருந்து விழுந்த காய்ந்த பூவை தன் வேண்டுதலுக்கு கடவுள் கொடுத்த நல்ல பதிலாக நினைத்துக்கொண்டு குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு எழுந்தாள்.
மிட்டு வழக்கம் போல உறங்கிவிட, நள்ளிரவு வரை ரவியின் வருகைக்காக ரூபா கஷ்டப்பட்டு காத்திருந்தாள். ரவி திரும்ப வந்தபோது அவன் முகத்தில் தெரிந்த அமைதியை வைத்து அந்த பிணம் அவினாஷாக இருக்காது என்று தோன்றியபோது ரூபாவின் மனதில் ஆசுவாசம். ரவி நேராக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு மெல்லிய ஈரத்தோடு கட்டிலில் வந்து மல்லாக்க விழுந்தான்.
ரூபா ரவியின் பக்கத்தில் படுத்து குற்ற உணர்ச்சியோடு அவன் நெஞ்சில் தலை வைத்துக்கொண்டு ரவியை இடுப்போடு கட்டிக்கொண்டாள். ரவி சலனம் காட்டவே இல்லை. அவனது கண்கள் மூடாமல் விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. ரூபா தன் உள்ளங்கையை ரவியின் மார்பில் நெஞ்சு முடியில் படரவிட்டாள். ரவியின் மூச்சு சீராக இருந்தது. ரூபா எக்கி ரவியின் முகமெங்கும் முத்தம் வைத்தபடி அவனது கூர்மையான காம்பை நிமிண்டினாள். ரவியிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. ரூபா ரவியின் உதட்டை கவ்வ, அவன் மரக்கட்டை போல படுத்திருந்தான். ரூபாவுக்குள்ளே கறுப்பு மனசாட்சி உசுப்பேற்ற, அவள் கோபம் தலைக்கேறியது.
“ஆம்பள கூட படுத்து படுத்து பொம்பள வாசமே ஆகாம போச்சு…” முனுமுனுத்தபடி ரூபா நகர்ந்து படுக்க, அந்த முனுமுனுப்பு ரவியின் காதில் விழுந்தது. ரவி பெருமூச்சோடு எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து கட்டில் விளிம்பில் உட்கார்ந்தான். ரூபாவின் புடவை மாராப்பை பிடித்து பலமாக இழுக்க, அவள் மிட்டுவை இடித்தபடி கட்டிலில் உருள, புடவை அவள் உடம்பில் இருந்து முழுமையாக உருவப்பட்டது. ரவி எழுந்தபோது லுங்கியில்லாமல் அவன் நிர்வாணமாக இருப்பதை கண்ட ரூபா, என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே ரவி அவள் மீது படுத்து ஆக்கிரமித்தான்.
“ஏங்க… என்ன பண்றீங்க? என்னை விடுங்க…” ரூபாவின் குரல் ரவியின் உதட்டு அடைப்பில் ஒடுங்க, ரவியின் முரட்டுப்பிடியில் ரூபா தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் கசங்கினாள். சிறிது நேரத்தில் ரூபா வன்புணர்வு செய்யப்பட்டாள். ரவி காரியம் முடித்த நிம்மதியில் எழுந்து அம்மணமாக ஜன்னல் வழியே நகரத்தை பார்த்தபடி நின்றிருந்தான். ரூபா கால்களை குறுக்கியபடி நெஞ்சில் கைவைத்து மூடியபடி ஒருக்களித்து கிடந்தாள். ரூபாவின் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது. புருஷனே ஆனாலும் சம்மதமில்லாத உடலுறவு பாலியல் பலாத்காரம் தானே? ரவியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாத deadpan expression நிறைந்திருந்தது.
அடுப்பில் பால் பொங்குவதன் அடையாளமாக “ஸ்ஸ்ஸ்ஸ்…” என்ற சத்தம் வர, ரூபா நிதானத்துக்கு வந்து அடுப்பை நிறுத்தினாள். காய்ச்சிய பாலில் Sunrise Instant Coffee பொடியை கலந்து cup-ல் ஊற்றிக்கொண்டு, cup-ஐ கையில் எடுத்தபடி ஜன்னலுக்கு வர, வெளியே சூரியன் தலைகாட்டி ஊரை எழுப்பிக்கொண்டிருந்தான்.
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 10/07/2019
* Read in Wattpad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/07/p-g-16.html
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |


![நண்பனுக்கு ஆறுதல் சொல்லப் போனேன் [சுட்டக்கதை]](https://gilmastories.com/wp-content/plugins/pt-content-views-pro/public/assets/images/lazy_image.png)
