| முன் கதை சுருக்கம்... |
|---|
| KT வாங்குறதுக்காக போன இடத்தில் அர்ணாபை பார்த்த நான், கொல்கத்தாவில் இருக்கும் வரைக்கும், சும்மா ஜாலிக்காக casual sex என்று ஆரம்பித்த எங்கள் காம விளையாட்டு நாங்களே எதிர்பாராத விதமாக எங்களுக்குள் காதல் உணர்ச்சிகளை உசுப்பிவிடுகிறது. நான் அர்ணாபிடம் என் காதலை தெரிவிக்கிறேன். ஆனால் என்னை soulmate ஆக ஏற்றுக்கொண்டாலும், என் காதலை ஒத்துக்கொள்ள என் அர்ணாப் ஒரு நிபந்தனை விதிக்கிறான். நான் Openly Gay-ஆக come out செய்தால் மட்டுமே வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழமுடியும் என்று அர்ணாப் திட்டவட்டமாக சொல்லிவிடுகிறான். அவ்வளவு தைரியம் எனக்கு இல்லாததால் நான் என் செய்து என்று குழப்பத்தில் ஆழ்கிறேன். என்ன செய்ய போகிறேன்..? |
நாங்கள் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தபோது எங்கள் தெருவில் நாய் நடமாட்டம் கூட இல்லாமல் வெறிச்சிட்டு இருந்தது. வாசலில் என் அப்பா சேர் போட்டு உட்கார்ந்தபடி மொபைலை நோண்டிக்கொண்டிருந்தார். எனக்கு அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்த்த தங்கமான மனுஷன். அவருக்கும் இந்த வீட்டில் ஒரு (மரு)மகள், குழந்தைகள் என்று கடைசி காலத்தை கழிக்கும் ஆசை இருக்காதா? ஆனால் என்னால் அதை நிறைவேற்றி கொடுக்கமுடியாதே! என் மனதில் குற்றவுணர்ச்சி அலையடித்து சென்றது. அது புரிந்ததாலோ என்னவோ விஷ்வாவும் காரில் இருந்து இறங்கி “ஹாய் அப்பா!” என்றான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
மேலும் தொடர்ந்தேன் “அர்ணாப் தயாரா இருந்தா நான் அவன் கூட relationship-ல இறங்க risk எடுக்குறதுன்னு தீர்மானிச்சிட்டேன். உன்னோட பயம் எங்கே நான் திரும்ப தனியா நின்னுடுவேனோங்குறது தானே? ஒருவேளை நான் risk எடுக்க பயந்து தனியாவே இருந்துட்டா? நான் நம்புற காதல் மேலே பாரத்தை போட்டுட்டு அவன் கிட்டே என்னோட love-ஐ propose பண்ண போறேன்… Wish me luck” என்று விஷ்வாவின் கையை கோர்த்துக்கொள்ள, அவன் என் கையில் முத்தம் வைத்து “சந்தோஷமா இரு கார்த்தி… Stay blessed” என்று சொன்னபோது அவன் முகத்திலும் ஒரு நிம்மதி.
வெளியே அரவம் எல்லாம் அடங்கி அமைதி நிலவ, என் மனதில் அமைதி காணாமல் போயிருந்தது. அர்ணாப் என்னிடம் நீ openly gay-வா என் வாழ்க்கையில் வந்தா நான் கட்டாயம் ஏத்துக்குவேன்னு ஏற்கனவே சொல்லியிருந்தாலும், எனக்கு அவனிடம் புதிதாக எனது காதலை சொல்லப்போவது போல பதற்றமாக இருந்தது. எனக்கு இப்போதே அர்ணாப்பை கூப்பிடவேண்டும் போல தோன்றினாலும், சுவற்றில் தொங்கிய கடிகாரத்தை பார்த்ததும் எனது உற்சாகம் வடிந்துவிட்டது. நான் WhatsApp-ஐ திறந்து அர்ணாப்பின் chat-ல் “Hi” என்று அடித்துவிட்டு மொபைலை கட்டிலில் போட்டுவிட்டு வெறும் ஜட்டியோடு கட்டிலில் மல்லாந்தேன். அர்த்த ராத்திரியில் அர்ணாப் முழித்திருந்து என் செய்திக்கு பதிலளிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. சில நொடிகளுக்கு பிறகு “ting” என்று எனது mobile notification tone கேட்க, ஆர்வத்துடன் எடுத்த நான் lock screen-ல் அர்ணாப்பின் பதிலை கண்டதும் பரவசத்தில் ஆழ்ந்தேன்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
நான் WhatsApp-ஐ மீண்டும் திறந்து அவன் அனுப்பிய பதில் செய்தியை முழுதாக அனுபவிக்கும் முன்பு அர்ணாப்பின் வீடியோ அழைப்பு மொபைல் திரையை அடைத்தது. நான் swipe up செய்து அவன் அழைப்பை ஏற்க, என் அர்ணாப் படுக்கையில் படுத்தபடி mobile front camera-வுக்கு தன் முகத்தை காட்டினான். நானும் ஒருக்களித்து படுத்தபடி என் mobile camera-வுக்கு முகம் காட்டி “ஹாய்” என்று சிரிக்க, “ஹலோ ப்ரணயி! அமி டோமாகே மிஸ் கோர்ச்சி…” என்று front camera lens-க்கு உதட்டை குழித்து முத்தம் வைத்தான். நான் கிறங்கிப்போனேன்.
நான் “நீ சொல்றதுக்கு exact-ஆ அர்த்தம் புரியலைன்னாலும் எனக்கு நீ என்னை மிஸ் பண்றேன்னு சொல்றேன்னு மட்டும் புரியுது… I too miss you badly” என்று பதில் முத்தம் கொடுத்தேன். “அப்புறம் என்ன? உடனே வந்துடு… என் வாழ்க்கையிலே முழுசா…. forget about my terms. Just walk into my life again. I am in an emotional vacuum. Fill my life” என்று சொன்னபோது நான் கறைந்து போயிருந்தேன். “வந்துடுறேன் அர்ணாப் பாபு! அப்படியே Closet-ல இருந்தும் வெளியே… I have decided to come out as gay openly” என்றபோது அர்ணாப் ஆச்சர்யத்துடன் “நிஜமாவா?” என்று கேட்டதும் அவன் போட்ட கண்டிஷன் எனக்கு வைக்கப்பட்ட சோதனை போல தோன்றியது. நான் “ஆமாம்” என்பது போல தலையை அசைக்க, என் கண்ணீர் காரணமாக mobile screen மங்கலாக தெரிந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு தண்ணியடித்த மப்பு எல்லாம் அர்ணாப்பின் சிரிப்பு கொடுத்த போதையில் காணாமல் போயிருந்தது.“சரி! நீ முதல்ல என்ன சொன்னே?” நான் அர்ணாப்பிடம் ஆர்வத்துடன் கேட்டேன். “மிஸ் கோர்ச்சின்னா மிஸ் பண்றேன்னு சொன்னேன்னு நினைக்கிறேன்… பாரு! உன்னால, உனக்காக நானும் பெங்காளி கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று பெருமிதமாக சிரிக்க, அர்ணாப் “ஹலோ என் உயிரே! நான் உன்னை மிஸ் பண்றேன்னு சொன்னேன்” என்று “உயிரே”வை அழுத்தமாக சொல்ல, நான் மூக்கை சுழித்து பழித்து காட்டினேன். எங்கள் இரவு அப்படியே sweet nothings-களில் தொடர்ந்தது…
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/08/2024
* Read in Wattpad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2024/08/04.html
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



